Tuesday, July 1, 2008

ஆனி முத்து வாங்கி வந்தேன்

பாடல்: ஆனி முத்து வாங்கி வந்தேன்
திரைப் படம்: பாமா விஜயம்
பாடியவர்கள்: பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலஷ்மி,
எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
ராஜலஷ்மி: நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ .. அடியோ
அனைவரும்: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்தக் கள்ளத்தனத்தினில் வந்ததடி
சுசீலா: வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மும் முத்து
நால் முத்து ... அம்மம்மா
ராஜலஷ்மி: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி
சுசீலா: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
ஈஸ்வரி: கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
சுசீலா: வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு ... பிள்ளைக்கு ... ஊருக்கு .. நாட்டுக்கு...
அனைவரும்: பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஓஓஓஓஓஓஓஓஓஓ ....ஓஓஓஓஓஓஓஓஓ ...ஆஆஆஆஆஆஆஆஆஆ


No comments: